உலகம்
அமெரிக்காவை அச்சுறுத்தும் புளோரன்ஸ் புயல்: 30 ஆண்டுகள் இல்லாத பாதிப்பு ஏற்படும் என எச்சரிக்கை
அமெரிக்காவை அச்சுறுத்திக் கொண்டிருந்த புளோரன்ஸ் புயல் இன்று கரோலினா மாகாணத்தைத் தாக்கும் என்று அந்நாட்டு வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரித்துள்ளது. இதனைத் தொடர்ந்து பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இதுகுறித்து அமெரிக்க வானிலை ஆராய்ச்சி மையம் தரப்பில், "அட்லாண்டிக் கடலில் உருவாகியுள்ள புதிய புயலான புளோரன்ஸ் வலுப்பெற்று வெள்ளிக்கிழமை அமெரிக்காவின் கரோலினா மாகாணத்தைத் தாக்க உள்ளது.
விளையாட்டு
டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வேன்: தடகள வீராங்கனை டூட்டி சந்த் உறுதி
டோக்கியோ ஒலிம்பிக் போட்டி யில் தங்கம் வெல்வதுதான் எனது அடுத்த இலக்கு என்று இந்திய தடகள வீராங்கனை டூட்டி சந்த் கூறினார்.
இதுகுறித்து பெங்களூருவில் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி: அண்மையில் இந்தோனேஷியாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் 2 வெள்ளிப் பதக்கங்களைக் கைப் பற்றினேன். இது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக அமைந்தது. இந்த ஆண்டு எனக்கு வெற்றிகரமான ஆண்டாக உள்ளது. ஆசிய விளை யாட்டில் 2 பதக்கம் வென்றதன் மூலம், முன்னாள் தடகள வீராங்கனை பி.டி. உஷாவின் சாதனையை சமன் செய்துள்ளேன்.
வணிகம்
பணமதிப்பு நீக்க நடவடிக்கையின்போது ஜன்தன் கணக்கில் போடப்பட்ட தொகை எவ்வளவு?- ரிசர்வ் வங்கியிடம் மத்திய தகவல் ஆணையம் கேள்வி
பணமதிப்பு நீக்க நடவடிக்கையின் போது பல்வேறு வங்கிகளில் ஜன்தன் கணக்கில் போடப்பட்ட பணம் எவ்வளவு என்ற விவரத்தை தெரிவிக்குமாறு ரிசர்வ் வங்கியிடம் மத்திய தகவல் ஆணையம் (சிஐசி) கேட்டுள்ளது.
பிரதம மந்திரி ஜன்தன் யோஜனா கணக்கு 2014-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தொடங்கப்பட்டது. அனைவருக்கும் வங்கிச் சேவை அளிக்க வேண்டும் என்ற நோக்கில் இது தொடங்கப்பட்டது. வங்கிச் சேவை கிடைக்காத மக்களுக்கு வங்கியில் பணம் செலுத்துவது, எடுப்பதை எளிதாக்க வங்கிக் கணக்கு, காப்பீடு, ஓய்வூதியம் உள்ளிட்ட தொகைகளை இந்தக் கணக்கில் போடப்பட்டது.
No comments:
Post a Comment