26th March Current Affairs for TNPSC Exam
- தமிழ்நாட்டின் தேர்தல் செலவினங்களின் சிறப்புக் கண்காணிப்பாளராக முன்னாள் இந்திய வருவாய் பணி அதிகாரியான மது மகாஜன் என்பவரை இந்தியத் தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது.
- இவர் வாக்காளர் புகார் எண் 1950 மற்றும் சி-விஜில் செயலி ஆகியவற்றின் மூலம் பெறப்படும் புகார்களின் மீது நடவடிக்கை எடுக்க நியமிக்கப்பட்டுள்ளார்.
- ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 22ம் தேதி பீகார் தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்தினமானது பீகார் மாநிலம் உருவாக்கப்பட்டதைக் குறிக்கிறது.
- 1912ம் ஆண்டில், வங்காள மகாணத்திலிருந்து ஆங்கிலேய ஆட்சியாளர்களால் பீகார் மாநிலம் பிரிக்கப்பட்டது.
- குறைந்த செலவில் விமானச் சேவையை அளிக்கும் நிறுவனமான ஸ்பைஸ்ஜெட் இந்தியாவின் முதலாவது நிறுவனமாக சர்வதேச வான்வழிப் போக்குவரத்து மன்றத்தில் (International Air Transport Association – IATA) இணைந்துள்ளது.
- இந்தியா மற்றும் ராயல் மலேசியா விமானப்படை பங்கேற்கும் “LIMA – 2019” (Langkawi International Maritime Aero Expo) என்ற விமானப் படை கண்காட்சியானது மலேசியாவின் லாங்குவாய் நகரில் மார்ச் 26 முதல் மார்ச் 30 வரை நடைபெற உள்ளது.
- கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்ச் ஓபன் டென்னீஸ் போட்டியானது பாரீஸ் நகரில் மே 26ல் தொடங்குகிறது.
- 2018 பிரெஞ்ச் ஓபன் டென்னீஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றவர்கள்.
- ஆண்கள் ஒற்றையர் பிரிவு – ரபேல் நடால் (ஸ்பெயின்)
- பெண்கள் ஒற்றையர் பிரிவு – சிமோனா ஹாலெப் (ருமேனியா)
- மனித உரிமை மீறல்களால் உரிமை மற்றும் கண்ணியத்திற்கான சர்வதேச தினம் – மார்ச் 24 (International Day for the Right to the truth concerning Gross Human Rights Violations and for the Dignity of Victims)
- மொத்த மனித உரிமை மீறல்களின் உண்மைக்கான உரிமை மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் கண்ணியத்திற்கான சர்வதேச தினம் ஆண்டுதோறும் மார்ச் 24 அன்று கடைபிடிக்கப்படுகிறது.
- உலக காசநோய் தினம் – மார்ச் 24 (World Tuberculosis Day 2019)
- காசநோய் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்துவதற்காக ஆண்டுதோறும் மார்ச் 24 அன்று, கடைபிடிக்கப்படுகிறது.
- 2019ம் ஆண்டின் உலக காசநோய் தின கருப்பொருள் (World Tuberculosis Day 2019 Theme) : இதுதான் நேரம் – தேவை – காசநோய் இல்லா ஓர் உலகிற்கான தலைவர்கள் (It’s time wanted : Leaders for a TB-Free world) என்பதாகும்.
- “The Great Disappointment: How Narendra Modi Squandered a unique opportunity to transform the Indian Economy” என்ற தலைப்பிலான புத்தகத்தை பொருளாதார, அரசியல் விமர்சகர் சல்மான் அனீஸ் சோஸ் அவர்களால் எழுதி வெளியிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment