27th March Current Affairs for TNPSC Exam
- சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தைச் (IIT – Madras) சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், உப்பு நீரை சூரிய ஒளியின் மூலம் குடிநீராக மாற்றும் முதலாவது ஆலையை தமிழகத்தின் கன்னியாகுமரியில் அமைத்துள்ளனர்.
- இத்திட்டத்திற்கு மத்திய புவி அறிவியல் அமைச்சகத்தினால் நிதியளிக்கப்படுகிறது.
- நிதி ஆயோக்கானது, எதிர்கால நடைமுறை மற்றும் கொள்கை முயற்சிகளுக்கான வடிவமைப்பை உருவாக்குதல் மற்றும் முழுமையான நிதி சேர்ப்பிற்கான நடவடிக்கைகள் ஆகியவற்றை மேற்கொள்வதை நோக்கமாகக் கொண்ட, நிதி தொழில்நுட்ப மாநாட்டை (FinTech Conclave – Financial Technology) புதுடெல்லியில் நடத்தியுள்ளது.
- வரி 1, 2015ல் உருவாக்கப்பட்டது.
- இதன் தலைவர் – நரேந்திர மோடி
- இதன் துணைத் தலைவர் – ராஜிவ் குமார்
- இதன் CEO – அமிதாப் காந்த்.
- டிஜிட்டல் முறையில் பணம் செலுத்துதல்களை வலுப்படுத்தவும், நிதி தொழில்நுட்பம் மூலம் நிதி சேர்த்துக் கொள்ளவும், இந்திய ரிசர்வ் வங்கியானது (RBI) “நந்தன் நீலகேனி” தலைமையில் 5 உறுப்பினர்கள் கொண்ட குழுவை நியமித்துள்ளது.
- ரிசர்வ் வங்கியின் தற்போதைய ஆளுநர் – சக்திகாந்த தாஸ்.
- ஜெனிவாவை தலைமையிடமாகக் கொண்ட உலக பொருளாதார மன்றத்தால் சமீபத்தில் வெளியிடப்பட்ட உலகளாவிய ஆற்றல் மாற்றம் குறியீட்டில் (Global energy Transition index) இந்தியா 76வது இடத்தில் உள்ளது.
- இக்குறியீட்டில் ஸ்வீடன் முதலிடத்திலும் சுவிட்சர்லாந்து இரண்டாவது இடத்திலும் உள்ளது.
- ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபியில், நடைபெற்ற சிறப்பு ஒலிம்பிக் உலக கோடைக்கால விளையாட்டுப் போட்டிகளில் 85 தங்கப் பதக்கங்களுடன் மொத்தம் 368 பதக்கங்களை வென்று இந்தியா வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.
- உலகளாவிய ஆசிரியர் பரிசு 2019 ஆனது பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த “பீட்டர் தபிக்சி” (Peter Tabichi) என்பவருக்கு வழங்கப்பட்டது.
- இவர் தனது மாத வருமானத்தில் 80 சதவீதத்தை ஏழைமக்களின் கல்விக்காக செலவிடுகிறார்.
- பாகிஸ்தான் தினம் – மார்ச் 23
- இந்திய துணைக் கண்டத்தில் வாழ்ந்த முஸ்லீம்கள் தங்களுக்கு தனிநாடு வேண்டி 1940ம் ஆண்டு மார்ச் 23 அன்று லாகூர் தீர்மானம் நிறைவேற்றியதை நினைவுப்படுத்துவதற்காக பாகிஸ்தான் தினம் மார்ச் 23 அன்று அனுசரிக்கப்படுகிறது.
- 1956ம் ஆண்டின் இதே தினத்தில் அந்நாட்டின் முதல் அரசியலமைப்பை ஏற்றுக் கொண்டதன் மூலம் பாகிஸ்தான் முதல் இஸ்லாமிய குடியரசாக உருவெடுத்தது.
- இந்தியாவின் தலைமைத் தேர்தல் ஆணையராக இருந்த “நவின் சாவ்லா” அவர்களால் “அனைத்து ஓட்டுகளும் எண்ணப்படும்” (Every Votes Counts) என்ற புத்தகம் எழுதப்பட்டு முன்னாள் குடியரசுத் துணைத் தலைவர் ஹமீத் அன்சாரியால் வெளியிடப்பட்டது.
- இந்த புத்தகத்தம் தேர்தலின் ஓட்டு இயந்திரம் எப்படி செயல்படுகிறது என்ற விளக்கத்தை அளிக்கிறது.
No comments:
Post a Comment